News Archive

தென்னை மரமானது வெப்பம் மிகுந்த நாடுகளில் ஒரு பயிர் மரமாக அதிகம் வளர்க்கப்படுகிறது.

நம் சமையல்களில் பயன்படுத்தும் தேங்காயானது இந்த தென்னை மரங்களில் இருந்து தான் கிடைக்கின்றன. தென்னை மரங்களில் தேங்காய் காயாக இருக்கும் போது இளநீர் 

எனப்படுகிறது.

இளநீரானது இயற்கையானது நமக்கு தென்னைமரங்களில் இருந்து அளிக்கும் சிறந்த வரப்பிரசாதமாகும்.

இளநீரை பருகுவதன் மூலம் மருத்துவ ரீதியாக பல நன்மைகள் ஏற்படும்.

இளநீரானது சோரியாசிஸ் போன்ற தோல் சம்மந்தப்பட்ட நோய்களை நன்கு தடுத்து சரும வியாதிகளில் இருந்து உடலினைக் காக்கிறது. உடலில் ஏற்படும் நச்சுக்கள் அனைத்தையும் வியர்வை வழியாக வெளியேற்றி உடலினை நச்சுத்த தன்மையில் இருந்து காக்கிறது.

உடலில் எலெக்ட்ரோலைட்ஸ் உப்பினை அளிப்பதோடு மட்டுமல்லாமல் சுறுசுறுப்பினையும் அளிக்கிறது.

உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியினையும் அளிக்கிறது.

நம் உடலுக்குத் தேவையான நல்ல கொலெஸ்டிரோலினை இளநீரானது ஊக்குவிக்கிறது.

மேலும் அதிகளவில் இளநீரை பருகுபவர்கள் ஹைப்பர்டென்ஷன் என்னும் மன அழுத்தம் வராமல் பாதுகாக்கப்படுகின்றனர்.

இளநீரை அருந்துவதால் மலச் சிக்கல், செரிமானக் கோளாறுகள் போன்றவற்றில் இருந்து நம் உடலைக் காக்கிறது.

அது மட்டுமில்லாமல் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை இளநீருக்கு உண்டு.

இளநீரில் கிருமி நாசினித் தன்மை அதிகம் உள்ளது. இளநீரில் இருக்கும் ஆசிட் தன்மையானது முகத்தில் இருக்கும் பருக்களை தடுக்கும் தன்மை கொண்டது.

இவ்வாறு இளநீர் அருந்துவதன் மூலம் நம் உடலானது பல நோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகிறது.

The coconut tree is widely grown as a crop tree in hot countries.

The coconut we use in our cooking comes from these coconut trees. When the coconut is a …

Read More

சிடி-ரோம் (காம்பாக்ட் டிஸ்க் ரீட்-ஒன்லி மெமரி) என்ற கருத்து ஒளியியல் சேமிப்பு தொழில்நுட்பத்தின் பரந்த வளர்ச்சியிலிருந்து வெளிப்பட்டது, இது பிரதிபலிப்பு மேற்பரப்பில் இருந்து தரவைப் படிக்க லேசர்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 1970 களில் அனலாக் மீடியாவை (வினைல் பதிவுகள் மற்றும் காந்த நாடாக்கள் போன்றவை) அதிக நம்பகத்தன்மை, ஆயுள் மற்றும் சேமிப்பு திறனை வழங்கும் டிஜிட்டல் வடிவங்களுடன் மாற்றுவதற்கான உந்துதலில் இந்த யோசனை வேரூன்றியது. லேசர் வீடியோ டிஸ்க்கின் வெற்றி (e.g., லேசர்டிஸ்க், 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்டது) டிஜிட்டல் தரவு சேமிப்பிற்காக ஆப்டிகல் தொழில்நுட்பத்தை மாற்றியமைக்க பொறியாளர்களை ஊக்குவித்தது, ஆடியோ மற்றும் வீடியோவைத் தாண்டி கணினி படிக்கக்கூடிய வடிவங்களுக்கு நகர்ந்தது.

சிடி-ரோம்களின் சுருக்கமான வரலாறு

அது எங்கிருந்து வந்தது
1970 களின் பிற்பகுதியில் ஆடியோ குறுந்தகடுகளால் ஈர்க்கப்பட்ட தரவைச் சேமிக்க லேசர்களைப் பயன்படுத்தும் யோசனையுடன் தொடங்கியது.
கணினி நிரல்கள் மற்றும் விளையாட்டுகள் போன்ற இசையை விட அதிகமாக சேமிப்பதற்கான வழியை மக்கள் விரும்பினர்.

யார் செய்தது
பிலிப்ஸ் (நெதர்லாந்தில் இருந்து) மற்றும் சோனி (ஜப்பானில் இருந்து) இணைந்து செயல்பட்டன.
அவர்கள் 1980 இல் ஆடியோ குறுவட்டியை உருவாக்கினர், பின்னர் 1983 க்குள் தரவுகளுக்காக அதை மாற்றினர்.
ஜேம்ஸ் ரஸ்ஸல் என்ற நபருக்கு 1960 களில் ஆப்டிகல் டிஸ்க்குகளுக்கான ஆரம்ப யோசனை இருந்தது, ஆனால் பிலிப்ஸ் மற்றும் சோனி அதை யதார்த்தமாக்கின.

அது எப்படி வளர்ந்தது
1985: ஃப்ளாப்பி டிஸ்க்குகளை விட 650 எம்பி கொண்ட முதல் சிடி-ரோம்கள் வெளிவந்தன!
1990கள் மென்பொருள், விளையாட்டுகள் (மிஸ்ட் போன்றவை) மற்றும் கலைக்களஞ்சியங்களுக்கு (என்கார்டா போன்றவை) மிகவும் பிரபலமானது.
காலப்போக்கில் வேகமாக கிடைத்தது (மெதுவான 1x முதல் வேகமான 52x டிரைவ்கள் வரை)
2000கள் டிவிடிக்கள் மற்றும் USBக்கள் கையகப்படுத்தப்பட்டன; இணைய பதிவிறக்கங்கள் குறுந்தகடுகளின் தேவையை குறைத்தன.
இன்று (2025) பெரும்பாலும் பழைய விளையாட்டுகள் அல்லது காப்புப்பிரதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் கிளவுட் மற்றும் எஸ். எஸ். டி கள் பெரியவை மற்றும் வேகமானவை.

சிடி-ரோம்கள் இன்று முக்கிய இடமாக உள்ளன, அவை காப்பக நோக்கங்களுக்காகவும், ரெட்ரோ கேமிங்கிற்காகவும் அல்லது வரையறுக்கப்பட்ட இணையம் உள்ள பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. டெராபைட் SSDகளுடன் ஒப்பிடும்போது அவற்றின் 700MB திறன் வினோதமானது, ஆனால் அவை டிஜிட்டல் சேமிப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக உள்ளன.

The concept of the CD-ROM (Compact Disc Read-Only Memory) emerged from the broader development of optical storage technology, which aimed to use lasers to read data …

Read More

சங்க காலத் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டில் ஈகைப் பண்பு தலை சிறந்து விளங்கியது.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கிணங்க சங்கத்தமிழர்கள் ஈகைப் பண்பில் சிறந்து விளங்கினர்.

அறிவில் மூத்த சான்றோர்கள் சங்க இலக்கியங்கள் வாயிலாக ஈகைக்கு எடுத்துக்காட்டாக கடையெழு வள்ளல்களின் ஈகைத் திறனை எடுத்தியம்பியுள்ளனர்.

காற்றில் துவண்டு படருவதற்கு இயலாமல் வருந்துவதாக எண்ணி முல்லைக்கொடிக்கு தன் தேரையே ஈன்றான் பாரிவள்லல்.

கார் மேகத்தைக் கண்டு அழகிய தன் தொகையை விரித்து ஆடத் தொடங்கிய மயிலைப் பார்த்த பேகன் மயிலானது குளிரில் நடுங்கிப் பரிதவிக்கிறதோ என்று எண்ணி தன்னுடைய பொன்னாடையையே போத்து மகிழ்ந்தான்.

தமிழ் வாழ வேண்டும் என்ற பெரிய உள்ளம் கொண்ட அதியமான் கிடைத்ததற்கரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் தமிழ் புலமை பெற்ற தமிழ் மூதாட்டிக்கு கொடுத்துதவினார்.

கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரி என்னும் மன்னன் வளமான நாடுகள் பலவற்றையும் தங்களுடைய திறமைமிக்க கூத்தின் மூலம் மகிழ்வித்த கூத்தாடிகளுக்கு கொடுத்து மகிழ்ந்தான்.

துன்பத்தால் துவண்டு வாடிய கலைஞரை தன்னுடைய சிறந்த ஆற்றலால் தோற்றுவித்தும் பெரிய மனதுடன் அக்கலைஞரின் வறுமையினைப் போக்க தன்னிடமுள்ள உயர் ஜாதிக் குதிரைகளையே பரிசாகக் கொடுத்தார் வள்ளல் காரி.

அண்டிராய் ஆய் என்னும் வள்ளல் கிடைத்ததற்கரிய நாக தேவதையின் நீல மணியினையும், கலிங்கம் என்ற ஆடையினையும் யாசித்து வந்த இரவலர்களுக்கு கொடுத்து அகமகிழ்ந்தான்.

வறுமையில் வாடி, பசியினால் துன்புற்று வந்த இரவலர்களுக்கு வாரி வழங்கி, பசி பிணியினைப் போக்கி எண்ணற்ற திரவியங்களை வழங்கி அகமகிழ்ந்தான் வள்ளல் நள்ளி.

ஓய்மா நாட்டை ஆண்ட நல்லியக் கோடன் என்ற மன்னன் எழுவரும் ஆற்றிய ஈகைப் பணியினைத் தான் ஒருவனாகவே ஆற்றி ஈகையில் சிறந்து விளங்கியதை பத்துப்பாட்டில் காணலாம்.

இவ்வாறு ஈகைக்கு எடுத்துக்காட்டாகச் சிறந்து விளங்கினார்கள் பண்டைய மன்னர்கள். அன்று அவ்வாறு சிறந்த பண்போடு கூடிய கலாச்சாரத்தையும் மேற்கொண்டனர் நம் முன்னோர்கள்.

The culture of the Tamils ​​of the Sangam period was characterized by generosity.

“To live in harmony with music is not that

There is no reward for life,” according to …

Read More

மருத்துவ குணாதிசயங்கள் நிறைந்த கீரையாக வல்லாரை விளங்குகிறது.

வியப்பூட்டும் வகையில் வாய்ப்புண்களைக் குணப்படுத்தும் வல்லமை படைத்தது வல்லாரைக் கீரை. ஞாபகசக்தியை அதிகரித்து மூளையை நன்கு சுறுசுறுப்பாக இயக்க வல்லது இந்த வல்லாரைக் கீரை. அதுமட்டுமல்ல பலவித நோய்களையும் கட்டுப்படுத்தும் தன்மை 

வல்லாரைக்கு உள்ளது. இரும்புச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சியுடன் தாது உப்புக்களும் இதில் நிறைந்துள்ளன. அது மட்டுமல்ல சுண்ணாம்புச் சத்தும் இதில் அடங்கியுள்ளது.

வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் வல்லமை படைத்தது வல்லாரைப் பொடி. அதோடு மட்டுமில்லாமல் வயிற்றுப புண், குடல் புண் போன்றவற்றையும் எளிதில் குணப்படுத்தும் தன்மை இந்த வல்லாரைக்கு உள்ளது. உடல் சோர்வினைக் குணப்படுத்த உகந்த கீரை.

காய்ச்சல், சளித்தொல்லை, தொண்டைக்கட்டினைப் போக்க வல்லது இந்த வல்லாரைக் கீரை. உடல் எறிவுத்தன்மைகளையும் குறைக்கும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை நீக்கும் தன்மை கொண்டது. வல்லாரை இலைகள் குழந்தைகளின் வயிற்றுப் போக்கினைத் தடுக்கவும் பயன்படுகிறது.

மூட்டு வலி, வீக்கங்கள் போன்றவற்றையும் குணமாக்கும் வல்லமை வல்லாரைக்கு உண்டு.

இவ்வாறு வல்லாரையின் வலிய நோய் எதிர்ப்பு சக்திகளைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

Centella asiatica (Vallarai in tamil) is a leafy green with medicinal properties.

Vallarai leafy greens have the amazing ability to cure mouth ulcers. Vallarai leafy greens can increase memory and …

Read More